Skygain News

மதம் மாற வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரம் செய்த 13 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்..!

நாகர்கோவில் அருகே சுண்ட பற்றி விளையில் மதம் மாற வலியுறுத்தி வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த 13 பேரை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர் அவர்களை போலீசில் ஒப்படைத்த நிலையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் ஈத்தாமொழி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த 13 பேர் ஒரு கார் மற்றும் ஒரு டெம்போ டிராவலரில் நாகர்கோவில் அருகே சுண்டப்பற்றி விளை என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கிறிஸ்தவ மத வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து மதம் மாறும் படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது இது பற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் அவர்களை சுற்றி வளைத்து சிறை பிடித்தனர் மதமாற்றம் செய்ய வலியுறுத்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்து குறித்து ஈத்தாமொழி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் ஈத்தாமொழி காவல் நிலையத்தினர் அங்கு வந்து 13 பேர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து 13 பேர்கள் மீதும் மூன்று புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் பிடித்து கொடுத்த 13 பேர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் ஈத்தா மொழி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர் கைது செய்த மதபோதர்களை பார்க்க வந்த சக மதபோதகர்களை அங்கு கூடியிருந்த ஊர்பொதுமக்கள் ஓட ஓட விரட்டி தாக்கமுயன்றனர் உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து பொதுமக்களை சாமதானபடுத்தி கலைந்து செல்ல வலியுறுத்தினர் ஆனால் கலைந்து செல்லமாட்டோம் என கூற காவல்நிலயத்தை முற்றுகையிட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாவிட்டால் இந்து அமைப்புகள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் மதகலவரம்மாக குமரி மாவட்டம் மாற வாய்ப்பு உள்ளது என்று அகில இந்திய இந்து மகாசபை துணைத்தலைவரும் தமிழ்நாடு இந்து மகா சபை தலைவருமான பாலசுப்பிரமணியன்டர் தெரிவித்துள்ளார் .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More