Skygain News

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம்…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு திட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று கல்வி வளாகங்களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது. இதையொட்டி தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கார்த்திக் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More