காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள மகளிர் ஹாக்கி அணியின் முக்கிய வீராங்கனையான நவ்ஜோத் கவுர் என்ற வீராங்கணைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 72 நாடுகளில் இருந்து சுமார் 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பதக்கம் வெல்லும் நோக்கத்தில் களம் கண்டு வருகின்றனர் . இதேபோல் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் பங்கேற்றுள்ளது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் ஆட்டத்தில் கானாவை வீழ்த்தி, அடுத்து வேல்ஸ் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்துக்கு முன்பாக வீராங்கனைகளுக்கு கொரோனா பரிசோதனை மோற்கொள்பட்டது .இந்த பரிசோதனையில், இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நடுகள வீராங்கனை நவ்ஜோத் கவுருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானதால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட நவ்ஜோத் தொடர் கண்காணிப்பில் உள்ளார். நவ்ஜோத் கவுர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மிக பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அடுத்து வரும் போட்டியில் இந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி முழு உத்வேகத்துடன் எதிரணியை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்டுகிறது.