புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் போன் செய்து பிம்பிரி சின்ச்வாட் தெகு ரோடு பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்வதாக சதி திட்டம் தீட்டப்படுவதாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சடைத்த போலீசார்கள் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புச் சென்று தீவிர ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வந்தனர். அதன் பின்னர் அந்த புகார் அழைப்பு வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மேலும் இதை அடுத்து அந்த புகாரை கொடுத்தவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 38 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் என்பவர் தான் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

மேற்கொண்ட விசாரணையில் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இருந்த அவர் அடுக்குமாடி குடியிருப்பு மேலே உள்ள பிளாட்டில் குழந்தை அழுததால் எரிச்சல் தாங்க முடியாமல் அங்கு இருப்பவர்களுக்கு தனது எரிச்சலை சொல்ல பாடம் புகட்ட இப்படி செய்ததாக சொல்லி இருக்கிறார்.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்யும் போது கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட அந்த வாலிபரின் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.