மாநாடு பட ரிலீஸின் போது சிம்பு எந்தளவிற்கு ட்ரெண்டானாரோ அதே அளவிற்கு கூல் சுரேஷும் ட்ரெண்டானார். மாநாடு படம் வெளியாக தாமதமானதால் கொந்தளித்த கூல் சுரேஷ் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ இணையத்தில் அடித்து நொறுக்கியது.. மேலும் வந்து தணிந்தது காடு, சிம்புவிற்கு வணக்கத்தை போடு என இவர் பேசிய வசனம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
இதைத்தொடர்ந்து ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் திரையரங்கிற்கு வந்து இதே வசனத்தை பேசி ரசிகர்கள் மனதில் இப்படத்தை ஆழமாக பதிய செய்தார் கூல் சுரேஷ். இந்நிலையில் கடந்த வாரம் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. அப்படத்தை காண கூல் சுரேஷ் தியேட்டர் வந்தபோது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போது கார் கண்ணாடியும் உடைந்துவிட்டது.
‘சிம்பு ரசிகர்கள் கூல் சுரேஷ் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டார்கள்’ என செய்தி பரவிய நிலையில் அது பற்றி கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.சிம்பு ரசிகர்கள் காரை அடித்து நொறுக்கவில்லை, அவர்கள் எனக்கு கை கொடுக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் கார் மீது ஏறிவிட்டார்கள்.
அதற்காக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என சொல்கிறார்கள், ஆனால் நான் அதை எதிர்பார்க்கவில்லை.நான் சினிமாவில் தான் இருக்கிறேன். உங்களை மகிழ்விக்க தான் தியேட்டருக்கு வந்து பேசுகிறேன், அதனால எனக்கு என்ன பணம் வருகிறதா. இப்போதும் நான் கஷ்டத்தில் தான் இருக்கிறேன். வாடகை கொடுக்க கூட பணமில்லை, வண்டி டியூ கட்ட முடியவில்லை என கண்ணீருடன் கூல் சுரேஷ் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சிம்பு என்னிடம் பேசினார். ‘நான் (சிம்பு) தியேட்டருக்கு போனால் கூட இப்படி வரவேற்பு கிடைத்திருக்குமா என தெரியவில்லை, ஆனால் உனக்கு கிடைத்திருக்கிறது, அதை விட்டுவிடாதே’ என கூறினார். இந்நிலையில் சமீபத்தில் சிம்பு என் அடுத்த படத்தில் கூல் சுரேஷ் நடிப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.