காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டபோது, சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லேசான காய்ச்சல் இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;
இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டில் தனிமைபடுத்தி கொண்டுள்ளேன் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 10, 2022