Skygain News

சீனாவை மீண்டும் சீண்டும் கொரோனா..! தொழிற்சாலையில் இருந்து தப்பியோடும் ஊழியர்கள்…

சீனாவின் வூஹான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தோற்று பரவ தொடங்கியது. இந்த கொடிய வைரஸால் பொதுமுடக்கத்தை அறிவித்த சீனா இன்று வரை அதில் இருந்து மீள முடியாமல் துவைத்து வருகிறது .

நாளடைவில் இந்த வைரஸ் உலகம் முழுக்க பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது . இதற்கிடையில் பல நாடுகள் இதனை இந்த கொடிய வைரஸை சிறப்பாக கையாண்டது. பொதுமக்களும் தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வருகின்றனர் .

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More