Skygain News

சீனாவில் தொடரும் கொரோனா: கட்டுப்பாட்டினை கண்டு கொந்தளிக்கும் மக்கள்..!

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசுக்கு பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. ஆனால், சீனா கடும் கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியது. இந்நிலையில், மீண்டும் தற்போது சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சீனாவில் புதிதாக கடந்த 24 மணிநேரத்தில் 40 ஆயிரத்திற்கு சற்று குறைவாக, 39,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 36,082 பேர் அறிகுறியற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் சுகாதார ஆணையம் வெளியிட்டது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளை விட அதிகமாகும். நேற்று முன் தினம் சீனாவில் 35,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்து வருகிறது. அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More