Skygain News

இந்தியா அதை செய்திருந்தால் ஆட்டமே மாறியிருக்கும்..புஜாரா கருத்து..!

இந்திய அணி தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியை சந்தித்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகிலேயே தலைசிறந்த அணியாக திகழும் இந்திய அணி ஆசிய கோப்பையில் எப்போதுமே ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இம்முறை இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது இந்திய ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் இந்திய அணி மீது பல கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் பிளேயர் புஜாரா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது “இந்திய அணியின் வீரர்கள் மிகச்சிறப்பாக கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை அனுபவம் நல்லதொரு படிப்பினையாக அமைந்துள்ளது. இருந்தாலும் இலங்கை அணி சிறப்பாக விளையாடி இருந்தது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

ஆசிய கோப்பையில் ஆட்டத்தின் முடிவுகளில் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என கருதுகிறேன். இந்தியா மட்டும் முதலில் பவுலிங் செய்திருந்தால் முடிவு மாறி இருந்திருக்க கூடும்” என புஜாரா தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More