Skygain News

பாலியல் புகாரில் சிக்கிய இலங்கை வீரர்.பாதிக்கப்பட்ட பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

இலங்கை அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தனுஷ்கா காயம் காரணமாக பாதியிலேயே டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகினார். ஆனால் நாட்டிற்கு திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே இருந்த அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தார்.

இதற்கு காரணம் அந்நாட்டை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என வந்த குற்றச்சாட்டு தான்.ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணும் – தனுஷ்காவும் ஆன்லைன் டேட்டிங் ஆஃப் மூலம் பழகியுள்ளனர். இருவரும் கடந்த நவம்பர் 2ம் தேதி சந்தித்துக்கொண்ட போது, அப்பெண்ணின் சம்மதம் இன்றியே பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, பெய்லும் கொடுக்கப்படவில்லை.இந்நிலையில் அப்பெண்ணின் வாக்குமூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், முதலில் இருவரின் சம்மதத்துடன் தான் உடலுறுவு கொண்டதாகவும், ஆனால் பின்னர் பாதுகாப்பு ஏதும் இன்றி தவறாக நடந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

இதனால் தனக்கு விருப்பமில்லை என அப்பெண் கூறியவுடனே, தனுஷ்கா அடித்து துன்புறுத்தியுள்ளார்.இந்த வாக்குமூலம் தனுஷ்காவின் வழக்கை மேலும் வலுவாக்கியுள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More