Skygain News

வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து: 10 மாத கைக்குழந்தை உள்பட 8 பேர் பலத்த படுகாயம்..!

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் மாணிக்கம். அண்ணா நகர் மூன்றாவது தெருவில் இவர் வசித்து வந்த நிலையில் முதல் மாடியில் சிலிண்டர் வெடித்ததில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.இன்று காலை தேனீர் போடும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. சிலிண்டர் வெடித்ததில் சுவர்கள் இடிந்து விழுந்து பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More