சிவகங்கை மாவட்டம் கானூர் கிராமத்திற்கு சொந்தமான கோயில் காளை உயிரிழந்ததை தொடர்ந்து கிராமமக்கள் சோகத்தில் மூழ்கினர். கானூர் சமய கருப்பண்ணசாமி கோயில் காளை திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார பகுதி ஜல்லிகட்டில் பங்கேற்று வெற்றி வாகை சூடி கிராமம் முழுவதும் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது .
இந்த காளை இதுவரை ஜல்லி கட்டு போட்டிகளிலும் சரி கிராமத்திலும் சரி எந்த உயிரிழப்பையும் ஏற்படுத்தியதில்லை என்று கூறப்படுகிறது . 21 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த இந்த காளை உடல் நல குறைவால் காலமானதை தொடர்ந்து கிராமமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர் .
இந்நிலையில் கானூர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் உயிரிழந்த காளைக்கு பட்டு வேஷ்டி, துண்டுஅணிவித்து அஞ்சலி செலுத்தி செலுத்தினர் .