Skygain News

கோயில் காளை உயிரிழப்பு…சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்..!

சிவகங்கை மாவட்டம் கானூர் கிராமத்திற்கு சொந்தமான கோயில் காளை உயிரிழந்ததை தொடர்ந்து கிராமமக்கள் சோகத்தில் மூழ்கினர். கானூர் சமய கருப்பண்ணசாமி கோயில் காளை திருப்பாச்சேத்தி சுற்றுவட்டார பகுதி ஜல்லிகட்டில் பங்கேற்று வெற்றி வாகை சூடி கிராமம் முழுவதும் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது .

இந்த காளை இதுவரை ஜல்லி கட்டு போட்டிகளிலும் சரி கிராமத்திலும் சரி எந்த உயிரிழப்பையும் ஏற்படுத்தியதில்லை என்று கூறப்படுகிறது . 21 ஆண்டுகளாக கம்பீரமாக வலம் வந்த இந்த காளை உடல் நல குறைவால் காலமானதை தொடர்ந்து கிராமமக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர் .

இந்நிலையில் கானூர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் உயிரிழந்த காளைக்கு பட்டு வேஷ்டி, துண்டுஅணிவித்து அஞ்சலி செலுத்தி செலுத்தினர் .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More