Skygain News

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், உலக புகழ் பெற்ற கோவில் ஆகும். இங்கு ஒவ்வொறு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிகழ்வினை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா எளிமையான முறையில் நடைபெற்றது. சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது.

இந்நிலையில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன் தினம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மேலும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப நிகழ்ச்சி டிசம்பர் 6-ந் தேதி நடைபெறவுள்ளது. விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More