Skygain News

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு..!

திருவண்ணாமலையில் வருகின்ற 6 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெறுவதையொட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திண்டிவனம் வழியாக செஞ்சி திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த போது தீடிர் என ஒலக்கூர் காவல் நிலைத்தையும், திண்டிவனம் காவல் நிலையத்தையும் ஆய்வு செய்தார். காவல் நிலையத்தில் உள்ள கோப்புகளையும் சரி பார்த்து குற்ற செயல் தடுக்கும் விதத்தில் காவல்துறையின் செயல்பட வேண்டுமானாலும் வழக்குகள் தேங்காமல் உடனடியாக பொதுமக்கள் குறைகளை கேட்டு வழக்கு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செஞ்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் உள்ளே வந்து வரவேற்பாளர் அறையில் வரவேற்பாளர் யார் என்று கேட்டதால் அங்கே பரபரப்பு காணப்பட்டது. பின்னர் காவல் நிலைய வளாகத்தில் உள்ளே சென்று ஆய்வு செய்து முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா,மாவட்ட காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், செஞ்சி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் இருந்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More