சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு தீடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தில் உள்ள சரித்திர பதிவேடுகள், குற்றச்சம்மந்த பதிவேடுகளை டிஜிபி ஆய்வு மேற்கொண்டார். மேலும் சமீபத்தில் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் என்னமாதிரியான குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளீர்கள் என்றெல்லாம் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் எழுத்தர் ராஜாமணியிடம் விசாரித்தார்.
பின்னர் காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆய்வாளர்கள், காவலர்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து உடல்நலம் குறித்தும் விசாரித்தார். இறுதியில் காவல் நிலையத்தில் பதிவேடு அனைத்தும் முறையாக பின்பற்று இருந்ததால் காவல் நிலைய எழுத்தர் ராஜாமணிக்கு ரூபாய் 5000 வெகுமதி வழங்கினார். பின்னர் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.