Skygain News

தனுஷ் தன் திரைவாழ்க்கையில் முதல்முறையாக செய்யும் காரியம்..நானே வருவேன் கதைக்களம் இதுதான்..!

தமிழ் சினிமாவில் தன் பன்முகத்திறனால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருப்பவர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்ட தனுஷ் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து உலகளவில் ரசிகர்களை கொண்டுள்ளார்.

மேலும் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்திலும் அறிமுகமாகிறார் தனுஷ். இந்நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் இறுதியில் வெளியாகவுள்ளது. செல்வராகவன் மற்றும் தனுஷ் பல வருடங்களுக்கு பிறகு இணையும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தாணு இப்படத்தை தயாரிக்க விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமூகத்தளங்களில் இப்படத்தின் கதைக்கரு பற்றிய தகவல் வேகமாக பரவி வருகின்றது.அதாவது நானே வருவேன் திரைப்படம் பேய் படமாக உருவாகியுள்ளதாகவும் , படத்தின் இயக்குனரான செல்வராகவன் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே தனுஷ் முதல்முறையாக பேய் படத்தில் நடிப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More