விஜய் என்னை மதிக்கவில்லை என்று நான் சொன்னேனா என எஸ்.ஏ.சந்திரசேகர் கொந்தளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திர சேகர், ரஜினிகாந்த், விஜயகாந்த்,சத்யராஜ் என முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி உள்ளார். சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். பெரும்பாலும் இவர் இயக்கும் படத்தில் சமூக கருத்துக்கள் மேலோங்கி இருக்கும். இதனால் புரட்சி இயக்குநர் என பெயர் எடுத்தார்.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக விளங்கிக் கொண்டிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து உள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
நான் கடவுள் இல்லை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக நடிகை சாக்ஷி அகர்வாலுடன் இணைந்து பேட்டி அளித்த எஸ்.ஏ.சந்திர சேகர் விஜய் குறித்த பல கேள்விக்கு பதிலளித்தார். அபோது, பணத்திற்காக பெற்றவர்களை விஜய் மதிப்பது இல்லை என்ற வதந்தியை மறுத்த சந்திர சேகர், பெரியவர்களை மதிக்கும் விஷயத்தில் என் மகன் இந்த உலகில் சிறந்தவன் என்றார்.