மின்னலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தாக்கியவர் தான் இயக்குனர் கௌதம் மேனன்.தான் இயக்கிய முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கௌதம் மேனன் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்தார்.
தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியுள்ள கௌதம் மேனன் நடிகராகவும் வெற்றிகண்டு வருகின்றார். இந்நிலையில் தளபதி விஜய்யை வைத்து யோஹன் என்ற படத்தை இயக்க நினைத்தார் கௌதம் மேனன்.
ஆனால் சில பல காரணங்களால் அப்படம் நடக்காமல் போனது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் அப்படம் ஒரு காதல் படமாகவே இருக்கும் என கூறியுள்ளார் கௌதம் மேனன்.
விஜய்யை போல ஒரு உச்ச நட்சத்திரம் புரட்சிகரமான மற்றும் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றார். எனவே தற்போது இருக்கும் சூழலில் விஜய் காதல் படத்தில் நடித்தால் அது ரசிகர்களும் சரி, அவருக்கும் சரி சற்று மாறுதலாக இருக்கும்.
எனவே விஜய்யை வைத்து ஒரு முழு நீள காதல் கதையை படமாக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார் கௌதம் மேனன்.