லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். மாநகரம் ,கைதி ,மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கினார்.இப்படத்தின் வெற்றியின் மூலம் இந்தியா முழுவதும் அறிந்த இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார்.மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகின்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கு பிறகு கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. KGF என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகரான யாஷை லோகேஷ் இயக்கவுள்ளது தமிழ் ரசிகர்களிடையே ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் லோகேஷ் தளபதி 67 படத்திற்குப்பிறகு கைதி 2, விக்ரம் 2 ஆகிய படங்களை இயக்குவார் என எதிர்பார்த்தனர் தமிழ் ரசிகர்கள். ஆனால் தற்போது யாஷை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக வந்த தகவல் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது