மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் பார்த்து பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவை மேலும் மணிரத்னம் பெருமைப்பட செய்துள்ளதாகவும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் ஷங்கரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு மணிரத்னத்தை பாராட்டியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது : “பொன்னியின் செல்வன் வசீகரிக்கிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தமிழில் ஒரு தரமான வரலாற்று படம். பிலிம் மேக்கிங்கில் தான் ஒரு கிங் என மீண்டும் நிரூபித்துள்ளார் மணிரத்னம்.
அழகாக காட்சிப்படுத்தி உள்ள ரவி வர்மனுக்கு தலைவணங்குகிறேன். ஏ.ஆர்.ரகுமானின் இசை இனிமையாக உள்ளது. 3 மணிநேர சூழ்ச்சிகள் நிறைந்த கதை கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க படத்தை கொடுத்த பிரம்மாண்ட குழுவுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
#PS1 Captivates.A quality Tamil historical film after years.#ManiRatnam Sir’s mastery in filmma’King’ proven yet again 👑🙌Hats off to @dop_ravivarman ‘s Picturesque depiction.@arrahman music-Riveting!Full 3hrs intrigues U for the sequel.Hail to the vast Army that made this epic!
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 5, 2022
இது தவிர இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் ,சிவகார்த்திகேயன் ஆகியோரும் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது