தமிழகத்தில் உயர்த்தி உள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது . கட்சியின் தலைவர் ஜி கே வாசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் . 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும் மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி கே வாசன் கூறியதாவது : திமுக தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டது குறிப்பாக மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறியிருந்த நிலையிலும் தற்போது மின் கட்டணம் உயர்த்தியுள்ளது மேலும் மாதந்தோறும் மின் அளவீடு நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளித்துவிட்டு அதனை செயல்படுத்தாமல் வரலாறு காணாத அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது .
இதுமட்டுமல்லாமல் தற்போது திமுக அரசு சொத்துவரியை பல மடங்கு உயர்த்தி உள்ளனர் கடந்த ஆட்சியின் போது சொத்து வரி உயர்த்தியதற்கு பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்திய திமுக . தற்போது இரட்டை வேடம் போட்டுக்கொண்டு சொத்து வரியை உயர்த்தியது கண்டிக்கத்தக்கது என்றும் சொத்து வரி மட்டுமில்லாமல் பால் விலை குடிநீர் வரி வீட்டு வரி என அனைத்தையும் ஏற்றியுள்ளது வேதனை அளிக்கிறது என்றும் மக்கள் மீது அக்கறை உள்ள அரசாங்கமோ வெளிப்படை தன்மை இல்லாமல் திராவிட திமுக அரசு இயங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர் அந்த அளவிற்கு தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாகவும் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் பிடித்து போதை பொருளில் சாதனை படைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.