டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 714 மாணவ மாணவிகளுக்கு உச்சநீதிமன்ற நீதியரசர் சுந்ரேஷ் பட்டங்களை வழங்கினார்.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் 3 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் உச்சநீதிமன்ற நீதியரசர் சுந்ரேஷ் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சீர்மிகு சட்டப் பள்ளியில் இளங்கலை மற்றும் முதுகலை சட்டம் பயின்ற 714 மாணவ மாணவிகள் தங்களின் பயிற்சிக்கான பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்சயில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தலைமை வழக்கறிஞர்கள், பெற்றோர்கள், சட்டத்துறை மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.