Skygain News

கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு..! அதிரடி காட்டும் உயர்கல்வித்துறை…

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. அந்த சமயத்தில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் நடந்து கொண்டதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களும், புகார்களும் அதிகரித்தன. இதன் அடிப்படையில் தமிழக அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விஷயங்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை செயல்படுத்தி கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது.

மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அதே நேரத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,அவர்களின் செயல்பாடுகள் குறித்து உறுதி செய்யவும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு ஓவர் கோட் போன்ற மேலாடையை சீருடை போல் அணிந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகள் தெரியாதவகையில் கண்ணியமிக்க ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். இந்த உத்தரவு உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More