Skygain News

முன் விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை..! எண்ணூரில் நடந்த பயங்கரம்…

வடசென்னை எண்ணூரில் வீட்டு வாசலில் உறங்கி கொண்டு இருந்த ரவுடியை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜாகிர் உசேன் . எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்தபோது 6 பேர்கொண்ட மர்ம கும்பல் கையில் கத்தியுடன் ஜாகிர் உசேனை கொலை செய்ய வந்துள்ளனர் . அப்போது உறங்கி கொண்டு கொண்டிருந்த ஜாகீர் உசேனை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்

இதில் சம்பவ இடத்திலேயே ஜாகீர் உசேன் உயிரிழந்துள்ளார் அப்பகுதி மக்கள் எண்ணூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் ஜாகீர் உசேன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜாகீர் உசேன் மனைவி செந்தாமரை புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அட்டு கார்த்திக் , அருன் குமார் , ரமேஷ் குமார் , கிஷோர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் தலைமறைவாக உள்ள பர்மா ராஜேஷ் , நிஜாமுதீன் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

உறவினர் வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்த ரவுடியை முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More