திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு வழங்கிய விலையில்லா வண்ண தொலைக்காட்சி மற்றும் கிரைண்டர் மிக்சி உள்ளிட்ட பொருட்களை அரசிடமே ஒப்படைக்க போவதாக கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது இருக்கும் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு தொடங்கியது , இதுகுறித்து மின்வாரிய அமைச்சர் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்வெட்டு நிலை உருவாகிறது என்று கூறினார் ஆனால் பராமரிப்பு பணி நிறைவடைந்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது,
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாகவும் , மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார் .