Skygain News

மெக்சிகோவில் நிலநடுக்கம்..! பீதியுடன் இருந்த மக்கள்

கடந்த சில நாட்களா மெக்சிகோ நாட்டின் மேற்கு மைக்கோகன் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ரிக்டர் அளவுகோளில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடைந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதனிடையே பயங்கர நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் வாபஸ் பெறப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் மற்றொரு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்நிலநடுக்கம் அகுய்லில்லா பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கே 46 கி.மீ. தொலைவில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More