சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் 1980 க்கு பின் இந்த பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களை போற்றும் விதமாக முன்னாள் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து விழாவுக்கு அழைத்து வரப்பட்டது.
முன்னா்ள் இந்நாள் ஆசிரியர்களை பாராட்டி பரிசு கேடயங்களை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழங்கினார்.
அதை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்கள் முன்னிலையில் தங்களுடைய ஆசிரியர்களை வணங்கி ஆசி பெற்ற நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது .