Skygain News

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய அஜித்..உச்சகட்ட சோகத்தில் ரசிகர்கள்..!

அஜித் தற்போது வலிமை படத்திற்கு பிறகு வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மிகுந்த எதிர்பார்ப்பில் மூன்று ஆண்டுகள் காத்திருப்பிற்கு பிறகு வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இதையடுத்து துணிவு படத்தை காலதாமதம் செய்யாமல் விரைவில் வெளியிட்டு மிகப்பெரிய வெற்றிப்படமாக்கும் முனைப்பில் படக்குழு செயல்பட்டு வருகின்றது.

இதைத்தொடர்ந்து இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் புரோமோஷன் நிகழ்வில் அஜித் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அவர் ஓகே சொன்னால் நேரு ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடைபெறும் என்றும் இணையத்தில் செய்திகள் தீயாய் பரவியது.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருந்தனர்.இந்நிலையில் ‘ஒரு நல்ல படம் அதற்கான விளம்பரத்தை அதுவே தேடிக் கொள்ளும்’ என்று அஜித் கூறியதாக, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் ‘துணிவு’ பட புரமோஷனில் அஜித் கலந்து கொள்வதாக வெளியான செய்தி வதந்தி என்பது உறுதியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More