மரக்காணம் கடலோரப் பகுதியில் உள்ள 19மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை 2000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழையின் தொடக்கம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், கைப்பாணி, அனுமந்தை, கூனிமேடு ஆகிய கடலோரப் பகுதியில்
19 மீனவ குப்பத்தில் உள்ள கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது . இதனால் 19 மீனவ குப்பங்களில் உள்ள சுமார் 2000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.