விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாகந்துர் கிராமத்தில் பள்ளி வேன் விளைநிலத்தில் கவிழ்ந்து 4 மாணவர்கள் லேசான காயம் வேன் சாலையோர ஈரத்தன்மை உள்ள சாலையில் இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து விளைநிலத்தில் கவிழ்ந்தது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ரெட்டணை கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி தினந்தோறும் சுற்று பகுதியில் உள்ள மாணவர்களை அழைத்து வருவதற்காக இப்பள்ளி வேன் சென்று வழக்கம். இந்த நிலையில் மழை காலம் என்பதால் தனியார் பள்ளி வேன் சாலை ஓர விலை நிலத்தில் கவிந்தது.
இதைக்கண்ட அருகே இருந்த பொதுமக்கள் விவசாயிகள் உடனடியாக வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்றி முதலுதவி சிகிச்சைக்காக இரட்டனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வேனை ஓட்டி வந்த டிரைவரை பொதுமக்கள் சாரா மாறியாக தாக்கியனர். இது சம்பந்தமாக பெரியதச்சூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.