இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ரோகித், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் கடுமையாக விளாசியுள்ளார்.
சீனியர் பிளேயர்களுக்கு எதற்காக ஓய்வு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், அவர்களை தொடர்ச்சியாக விளையாட வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பை இருக்கும்போது, ஒரு அணியாக அனைவரும் தொடர்ச்சியாக இணைந்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்போது தான் தவறுகளை சரியாக அடையாளம் கண்டு, அதனை அடுத்தடுத்த போட்டிகளில் திருத்திக் கொள்ள முடியும். பார்ட்னர்ஷிப் உருவாவதும், வீரர்கள் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து விளையாடும்போது மட்டுமே இருக்கும்.
பிளேயர்கள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருந்தால், நிலையான அணியாக இருக்காது. அவர்களால் எப்படி விளையாடுவது? நிலைத்தன்மை உருவாக்குவது எப்படி? போன்ற விஷயங்கள் பெரும் பின்னடைவாகவும், குழப்பமாகவும் இருக்கும். இதனால், சீனியர் பிளேயர்களுக்கு பிசிசிஐ ஓய்வு கொடுக்கவே கூடாது என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்