Skygain News

முதலில் யார் காதலை சொன்னது..மஞ்சிமா – கௌதம் கார்த்திக் பகிர்ந்த சீக்ரட்ஸ்..!

கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோஹன் தேவராட்டம் படத்தின் மூலம் ஜோடிகளாக நடித்தனர். அப்படத்தில் நடிக்கும்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் இதனை மஞ்சிமா மோகன் மறுத்தார். வெறும் நட்பு தான் என கூறினார். ஆனால் கௌதம் கார்த்திக் இதைப்பற்றி எதுவும் பேசாமல் இருந்தார்.

இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். மேலும் நவம்பர் 28 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் காதலை பற்றி பேசியுள்ளனர். இதுபற்றி கௌதம் கார்த்திக் கூறியதாவது, முதலில் நட்பாகத்தான் இருவரும் பழக ஆரம்பித்தோம். அதன் பிறகு இருவருக்குள்ளும் காதல் வந்தது. அந்த காதலை முதலில் நான் தான் மஞ்சிமாவிடம் கூறினேன்.

இரண்டு நாட்கள் கழித்து தான் காதலை உறுதிப்படுத்தினார் மஞ்சிமா. மேலும் எங்கள் வீட்டில் எந்த வித மறுப்பும் இன்றி இக்காதலுக்கு அனுமதி அளித்தனர் என்றார் கௌதம் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More