தமிழ் சினிமாவில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்தோடு கடல் படத்தில் நாயகனாக அறிமுகமானார் கௌதம் கார்த்திக். முதல் படமே மணிரத்னத்தின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என மிகப்பிரமாண்டமாக இருந்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
இருப்பினும் ரங்கூன் ,இவன் தந்திரன் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார் கௌதம் கார்த்திக்.இந்நிலையில் தேவராட்டம் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது இவருக்கும் நாயகி மஞ்சிமா மோகனுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. தொடர்ந்து பல வருடங்களாக இருவரும் காதலிப்பதாக வந்த செய்தியை மஞ்சிமா மோகன் மறுத்தார்.
ஆனால் இதற்கு கௌதம் கார்த்திக் எந்த வித விளக்கமும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதையடுத்து ரசிகர்களும் ,திரைபிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை அவர்களுக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்களது திருமணம் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண வரவேற்பு விழாவும் சென்னையில் நடக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.