Skygain News

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்பட குரூப்-2, 2ஏ பிரிவுகளின்கீழ் வரும் 5,208 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது.

இந்த குரூப் 2, 2ஏ தேர்வை எழுத சுமார் 11.78 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், 9,95 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தேர்வு முறை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் குரூப் 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More