Skygain News

இந்த வசதி அப்போது இருந்திருந்தா நான் தான் ‘சிஎம்’… சரத்குமாரின் ஆவேச பேச்சு

சென்னை திருவொற்றியூரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கும் ,நலிந்தோருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் சரத்குமார் பங்கேற்று பட்டாசுகள், புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியினர் அரசியல் மட்டுமல்லாது ஆன்மீகம் , சமத்துவம் என்று அனைத்தும் பேசக்கூடியவர்களாக தான் இருப்பார்கள். தொண்டர்கள் மக்களுக்காக உழைத்தால் தலைவன் முதல்வராகலாம் ஏன் பிரதமராகவும் ஆகலாம். எந்த ஒரு பண பலமும் இல்லாமல் பொருளுதவியும் இல்லாமல் 15 ஆண்டுகள் இந்த இயக்கம் இயங்கி வருவதே பெரிய சாதனைதான் என்றார் சரத்குமார்.

அவர் மேலும், அரசியல் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல. சேவை செய்வதற்காகவும் தான் அரசியல். நாங்கள் தொண்டு சேவை உதவி செய்து கொண்டிருந்த காலத்தில் தற்போது இருக்கும் வசதிகளைப்போல செல்போன், வீடியோ கேமராக்கள் இருந்திருந்தால் அன்றைக்கு நான் தான் “சிஎம்”என்றார்.

எல்லோர் கையையும் கீறினால் சிகப்பு நிறத்தில் தான் ரத்தம் வரும் . அதுதான் சமத்துவம். சாதி குறிப்பிட வேண்டிய இடத்தில் எனது தந்தை மனித ஜாதி என்று குறிப்பிட்டதாலேயே எனக்கு பல கல்லூரிகளில் இடம் மறுக்கப்பட்டது. அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பதை விட அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பவன் தான் தலைவன் என்றார் சரத்குமார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More