இந்திய அணி ஆசிய கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது. என்னதான் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றாலும் இந்திய வீரர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது ரசிகர்களாலும், பல முன்னாள் வீரர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அணியில் பல மாற்றங்களை செய்து பலரையும் குழப்பி இந்தியா இன்று இந்த நிலைக்கு வந்துள்ளது என பல ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஜடேஜா அணியிலிருந்து காயம் காரணமாக வெளியேறியது அணிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஒரே வீரரின் வெற்றிடத்தை நிரப்ப அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
அந்த மாற்றத்தின் காரணமாகத்தான் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பல கேள்விகளை முன் வைத்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உம்ரான் மாலிக் எங்கே (150 கி.மீ. வேகம்)? . தீபக் சாஹர் அணியில் ஏன் இடம்பெறவில்லை (மிகச்சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளர்)?. வாய்ப்புகள் கிடைக்க இவர்கள் தகுதியற்றவர்களா என்று நீங்கள் கூறுங்கள்? தினேஷ் கார்த்திக்கிற்கு ஏன் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை? ஏமாற்றம்’ என தெரிவித்துள்ளார். இதுபோல பல முன்னாள் வீரர்கள் இந்திய அணி மீது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
Where is Umran malik (150km speed) ? Why Deepak chahar (top quality swing bowler )wasn’t there ? Tell me if these guys don’t deserve the chances ?? Why Dinesh Karthik don’t get chances consistently?? Disappointing
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 6, 2022