Skygain News

தமிழக கடலோர பகுதிகளில் இந்த தேதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களை உலுக்கி எடுத்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 16-ந் தேதி (நாளை) உருவாகிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் வரும் 19ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே நவம்பர் 19ம் தேதி முதல் மழை படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More