கல்வராயன்மலை வெள்ளி மலை பகுதிகளில் தொடரும் கனமழையால் மலட்டாற்றில் தீடிர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதனால் 15 கிராம மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது . மேலும் பால் உள்ளிட்ட உணவு பொருட்களை கயிறு கட்டி அனுப்பி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதிகளில் இரண்டு தினங்களாக இடைவிடாமல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் தொரடிப்பட்டு அருகில் உள்ள மலட்டாற்றில் தீடிர் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் தொரடிப்பட்டு,எழுத்தூர், ஏற்றப்பட்டி ,மட்டப்பட்டு, எருக்கம்பட்டு, துரங்கூர், மேல்முருவம், விளாம்பட்டி ,போன்ற 15 கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேலும் அப்பகுதியில் கொள்முதல் செய்யும் பால் வாகனத்தில் எடுத்து வர முடியாமல் பால் உள்ளிட்ட உணவு பொருட்களை கயிறு மூலம் கரையிலிருந்து இக்கரைக்கு இழுக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிரந்தர தீர்வாக உயர்மட்ட பாலம் அமைத்து தருவார்களா? என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.