Skygain News

மூட்டு வலியை நிரந்தரமாக போக்க சக்தி வாய்ந்த தூள் இதோ..!

அதிகமாக மூட்டுகளில் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் காலை கடன் தவறான முறையில் அமர்ந்து கழிப்பதாலும் மூட்டு வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய வைத்திய முறைகள் இருக்கின்றன. பொதுவாக இது அதிக வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். இதற்கான அறிகுறிகள் படிக்கட்டு ஏற முடியாமல் அவதி படுத்தல், மூட்டுகளில் வலி போன்றவை இதற்கு ஒரு இயற்கை மருந்து எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய பச்சை வாடை போகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். எள் கடாயில் கொட்டிய உடன், பட் பட் என வெடிக்க தொடங்கும். அது வரை வறுத்துக் எள்ளு கருகி விடக்கூடாது. அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கரைசலை சூடாக இருக்கும் பாலில் ஊற்றி கலந்து அப்படியே குடித்து விடவேண்டியது தான்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More