Skygain News

டிடிவியை விரைவில் சந்தித்து பேசுவேன்..விமான நிலையத்தில் அந்தர் பல்டியடித்த ஓபிஎஸ்..!

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை விரைவில் சந்தித்து பேசுவேன் என்று விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்களை குழம்ப வைத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் பயணிக்கும் பாதைகள் வேறு. அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது என்று திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் பேட்டியளித்தார்.

திமுகவும் , அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதைகள் வேறு.


அதிமுகவில் தொண்டர்கள் இடையே ஒற்றுமையுள்ளது. ஆனால் தலைமையில் தான் பிரச்சனை உள்ளது என்ற மாயத் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என்றார் .

அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடிக்க பாஜக திட்டமிடுவதாக வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய ஓபிஎஸ்., அதிமுகவையோ அதன் தொண்டர்களையோ யாரும் பிளவு படுத்தி பார்க்க முடியாது. அதிமுகவை யாரும் மிரட்டவும் முடியாது என்றார்.

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த டிடிவி, அதிமுகவுடன் கூட்டணி சேர தயார் என அறிவித்துள்ளது குறித்து கேட்ட போது, அது நல்ல கருத்து தான் என்றும், அதனை நான் வரவேற்கிறேன். தஞ்சாவூரில் வாய்ப்பு இருந்தால் அவரை நேரில் சந்தித்து பேசுவேன் என்றார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More