இந்திய சினிமாவின் ‘ இஞ்சி இடுப்பழகி ‘ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை இலியானா பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ள இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் இவர் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை இலியானா சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூ நீபன் என்பவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது. ஒருகட்டத்தில் இந்த உறவும் முறிந்து போனது. இதனால் இலியானா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதன்காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிப்பதை இலியானா தவிர்த்து வருகிறார். இந்நிலையில் செபாஸ்டின் லாரன்ட் மைக்கேல் என்பவரை இலியானா காதலித்து வருவதாகவும், கடந்த 6 மாதங்களாக இருவரும் ஜோடியாக வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. செபாஸ்டின் லாரன்ட் மைக்கேல் முன்னணி இந்தி நடிகை கத்ரீனா கைபின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
