Skygain News

கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை அலேக்காக தூக்கிய பலே திருடன்..!

விழுப்புரம் எம்.ஜி ரோட்டில் மார்கெட் சென்ற ஓட்டுநர் இடம் நூதன முறை செல் போன் பறித்த வீடியோ சமூக வலைதள்ளத்தில் வேகமாக பரவி வருகிறது .அன்று ஒரே நாளில் 1 லட்சம் மதிப்பிலான 7 செல் போன்கள் திருடு போய் உள்ளது

கடந்த மாதம் ஆகஸ்ட் 30 ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் பார்த்தசாரதி என்பவர் பூ,பழங்கள் பூஜை பொருட்களை வாங்க சென்றார் . அப்போது இவர் அருகில் இருந்த ஒரு வாலிபர் சட்டை பையில் இருந்த 20 ஆயிரம் மதிப்பிலான செல் போனை நூதன முறையில் லகுவாக கை விட்டு திருடி சென்று விட்டார்.பிறகு சிறிது நேரம் கழித்து பார்த்த போது செல் போன் காணாமல் போனது தெரியவரவே அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து மேற்குக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அங்குள்ள கடையில் இருந்த சிசிடிவி காட்சி பதிவு கொண்டு செல்போன் திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர் . அன்று மட்டுமே 1 லட்சம் மதிப்பிலான 7 செல் போன்கள் திருடு போய் உள்ளது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More