Skygain News

செஞ்சியில் அதிகாலை முதல் தொடர் மழை – வாரச்சந்தை வெறிச்சேடியது..!

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் பேரில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செஞ்சி சந்தை மேட்டு பகுதியில் உள்ள வார சந்தையில் காய்கறி, ஆடு, மாடு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வந்தது.

இன்று தொடர் மழை காரணமாக வெளியூர்களிலிருந்து விவசாயிகள் ஆடு மாடு, காய்கறிகள் கொண்டு வராததால் வாரச் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில காய்கறி கடைகள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் ஆனால் அதனை வாங்க யாரும் முன் வரவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர் மழை காரணமாக செஞ்சி சுற்று வட்டார பகுதிகளான அப்பம்பட்டு, நாட்டார்மங்கலம், அனந்தபுரம், மேல்மலையனூர்,அவலூர்பேட்டை ,ஆலம்பூண்டி ,சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More