5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சேவையை தட்டு தடையின்றி வழங்குவதற்காக பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் நோக்கியா நிறுவனம் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமீபத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், பல ஆண்டுக்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 43 ஆயிரத்து 084 கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.
இது மட்டுமின்றி 5ஜி நெட்வொர்க் தொடர்பாக எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே 5ஜி சேவையை வெளியிட ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது.
இந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் துவங்க இருக்கும் நிலையில், எரிக்சன் நிறுவனத்துடன் சேர்ந்து நாடு முழுவதும் கனெக்டிவிட்டி சார்ந்த சேவைகளை ஏர்டெல் தங்கு தடையின்றி கொடுக்கும் என்ற தெரிவித்துள்ளது.