இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை கிரிஸ்ட்சர்ச்-ல் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சமனிலாவது முடியும் என்பதால் தீவிர முணைப்பு காட்டி வருகிறது.இந்நிலையில் இந்த போட்டியிலும் மழை வாய்ப்புள்ளதா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. க்ரைஸ்ட் சர்ச் நகரில் தற்போது வரை வெயில் அடித்துக்கொண்டு தான் உள்ளது.
— BCCI (@BCCI) November 29, 2022
ஆனால் போட்டி நடைபெறும் நாளைய தினம் நல்ல மழை பொழியும் என்று கூறப்பட்டுள்ளதால், 3வது போட்டியும் ரத்து செய்யப்படவே வாய்ப்பு அதிகம் உள்ளது.இந்நிலையில் சரியாக மதிய நேரத்தில் வானத்தில் மேக மூட்டங்கள், பனிப்பொழிவு, மழை என வானிலை மோசமாக இருக்கும் எனவும், மாலை நேரத்தில் அது சற்று குறைந்து மேகமூட்டத்துடன் மட்டும் இருக்கலாம் எனக்கூறப்பட்டுள்ளது.