டி20 உலக கோப்பையில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரை இறுதி சுற்றுக்கு செல்ல முடியும்.
அப்படி இந்திய அணி ஒருவேளை தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா வெளியேறும்.இந்த நிலையில் மெல்போனில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியாவின் கடைசி ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும் போட்டி நடைபெறாமல் இந்தியாவிற்கு ஒரு புள்ளி கிடைக்கும் பட்சத்தில் இந்தியா அரையிறுதிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது