ஆசிய கோப்பையின் தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் தற்போது அந்த விமர்சனங்கள் அனைத்தும் பாராட்டுகளாக மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் 19 பந்துகளில் கேமிரான் கிரின் அரைசதம் விளாசினார். பெரிய ஸ்கோர் ஆஸ்திரேலிய அணி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சர் பட்டேல், சாஹல் ஆகியோர் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் டிம் டேவிட் அரைசதம் விளாச, ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.இதையடுத்து ஆடிய இந்திய அணியில் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களில் வெளியேற, இந்திய அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது.
அப்போது களத்தில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டியது.தனால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 36 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் 69 ரன்களை விளாசினார். இதில் 5 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும்.
விராட் கோலி 38 பந்துகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 8வது அரைசதத்தை அடித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. விராட் கோலி முதல் பந்தில் சிக்சர் அடித்து மறு பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஒரு ரன்னும், 4வது பந்து டாட் பாலாக ஆனது. இதனால் கடைசி 2 பந்தில், 4 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட ஹர்திக் பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது