இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய T20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.இந்நிலையில் இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது ஆனால் இன்று எங்களுக்கான நாளாக இல்லை.
முக்கிய போட்டிகளில் நிறைய ரன்கள் தான் உதவும். 15 – 20 ரன்கள் குறைவாக அடித்ததே தோல்விக்கு காரணம் என நான் நினைக்கிறேன். ஒருவேளை 180+ ரன்களை அடித்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்.இந்திய அணியும் அதிக ரன் அடிக்கதான் முயன்றது.
ஆனால் பிட்ச்- மிகவும் மெதுவாக இருந்ததால் ரன்களை அடிக்கவே முடியவில்லை என வீரர்கள் கூறினர். எனினும் இதில் நாங்கள் செய்த தவறுகளை இனி சரிசெய்துக்கொள்வோம். எதிர்காலத்தில் வரும் போட்டிகளில் கவனம் செலுத்தப்போகிறோம் என டிராவிட் கூறினார்.