இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து பல சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்தது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரனான ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியதால் டீமில் இடதுகை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காக பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திகை நீக்கிவிட்டு பந்த்க்கு இடமளிக்கப்பட்டது.
மேலும் பல மாற்றங்கள் செய்த இந்திய அணியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று வாழ்வா சாவா என்ற நிலையில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்நிலையில் கடந்த பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்களை சேர்த்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் (13), ரிஷப் பண்ட் (14), ஹர்திக் பாண்ட்யா (0) என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
விராட் கோலி மட்டும் தனியாளாக அடித்த 60 ரன்கள் தான் இந்திய அணியை காப்பாற்றி கரைசேர்த்தது.துபாய் களத்தில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவதால், இடதுகை பேட்ஸ்மேன்கள் மிடில் ஓவர்களில் தேவை. அந்தவகையில் தினேஷ் கார்த்திக் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய வீரரை ஓரம்கட்டிவிட்டு, இளம் வீரர் ரிஷப் பண்ட்-ஐ அணியில் சேர்த்தனர். பேட்டிங்கிற்கு பிட்ச் நன்றாக இருந்த போதும், அவர் டைமிங்கே இல்லாமல் மோசமான ஷாட்டை ஆடி அவுட்டானார்.
அவர் அவுட்டானது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக சென்றது. ரோகித் சர்மாவும் இதற்கு பண்ட்-ஐ ஓய்வறையில் திட்டிய வீடியோ இணையத்தில் வெளியானது.இந்நிலையில் இதுகுறித்து டிராவிட் அதிரடி முடிவை கையில் எடுத்துள்ளார். அதாவது இனி வரும் போட்டிகளில் இடதுகை என்ற ஃபார்முலாவை தள்ளிவைத்துவிட்டு, இந்தியாவின் வழக்கமான பேட்டிங் பலத்துடன் செல்லவுள்ளது.
அதன்படி லோயர் ஆர்டரில் இனி பண்ட்-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தான் களமிறங்கவுள்ளார்.இந்நிலையில் இந்தியா ஸ்ரீலங்கா அணியுடனான போட்டியில் வேலும் பட்சத்தில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது