இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்கும் T 20 உலகக்கோப்பைக்காக புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. வெளிர் நீல நிறத்தில் காலரும், தோள்பட்டை வரும் இடத்தில் ராயல் ப்ளூ நிறத்திலும் இந்த ஜெர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்த்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருடன், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரேணுகா சிங் ஆகியோர் புதிய ப்ளூ ஜெர்சியை அணிந்து செம கெத்தாக வீறுநடை போடும் படத்தையும் BCCI வெளியிட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற டி20 உலக்கோப்பை போட்டியில் இந்தியா அரை இறுதி சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் சூப்பர் 12 நிலையிலேயே வெளியேறியது. இந்த நிலையில் இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற வெறியுடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இந்நிலையில் உலககோப்பைக்கு முன்பு ஜெர்ஸியை மாற்றியுள்ள இந்திய அணிக்கு புது ஜெர்சியின் ராசி கைகொடுக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.